நாட்டில் பேருந்து பயணிகளுக்கு அவசர அறிவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கு போதே அவர் பயணிகளுக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பயணிகளை சுரண்டும் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும். அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளது.
அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11.04.2026) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்தது.
இந்த நிலையில் அந்தப் பேருந்துகளை அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என குறிப்பிட்டார்.