ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கமானது 2.2 சதவீதமாக பதிவாகியிருந்தது.
அதேநேரம் கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.