முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்திப் பவனியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சென்று மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணை சென்றடைய உள்ளது.
அதேவேளை தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.