;
Athirady Tamil News

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

0

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.585 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.597 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

அருணாச்சல பிரதேசம்
முன்னதாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திலும் நேற்று நள்ளிரவு 11.16 மணியளவில் ரிக்டர் 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.