;
Athirady Tamil News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிகள் இன்று(27.06.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திகதி வெளியானது..

இதற்கமைய, விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 08ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்க முடியும்.

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாம் வினாத்தாள் அன்று முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

You might also like

Leave A Reply

Your email address will not be published.