;
Athirady Tamil News

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – 40 பேர் காயம்

0

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து அதிகாலை நேரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தியத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்தே இந்த பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 பேர் காயம்
விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக தியத்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.