கண்ணீரில் குளித்த முள்ளிவாய்க்கால் மண்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகத்தில் நினைவேந்தப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பங்கேற்ற மக்கள் தமது உயிரிழந்த தமது உறவுகளுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
