;
Athirady Tamil News

வரலாற்று சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா! இரண்டே நாட்களில் உயர்ந்தது டொலர்

0

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன்(15.05.2026) ஒப்பிடும் போது இன்றையதினம்(18.05.2026) அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்ந்து ரூபாவின் பெறுமதி வலுவிழந்துள்ளது.

அதிகூடிய விற்பனை விலை
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்றங்களுக்கு அமைய டொலரின் விற்பனை பெறுமதி 334 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 326.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.26 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 334.22 ரூபாவாக பதிவாகியிருந்து. அதன் பின்னர் ஒரு டொலரின் அதிகூடிய விற்பனை விலை இன்றையதினமே பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.