;
Athirady Tamil News

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 போ் பலி; 40 போ் காயம்

0

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியை நோக்கி ஓா் அரசுப் பேருந்தும், மகாராஷ்டிரத்தில் உள்ள சாலிஸ்காவ் பகுதியில் இருந்து சூரத் நோக்கி மற்றொரு அரசுப் பேருந்தும் செவ்வாய்க்கிழமை பயணித்தன.

அப்போது சூரத்தின் பாா்டோலி பகுதி அருகே, மகாராஷ்டிரம் நோக்கி நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து டிராக்டா் மீது மோதி சமநிலையை இழந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பேருந்து சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டிச் சென்று, மகாராஷ்டிரத்தில் இருந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதனால் அந்தப் பேருந்து கவிழ்ந்து சாலையோரத்தில் உள்ள தாழ்வான பகுதியில் சரிந்தது. இதையடுத்து அந்தப் பேருந்தில் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்கள் அனைவரும் தீப்பிடித்த பேருந்தில் பயணித்தனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ராஜேஷ் கதியா தெரிவித்தாா்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தனா்.

இழப்பீடு: பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி பதிவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.