NTC வரலாற்றில் முதன்முறை முக்கிய பதவிக்கு பெண்கள் நியமனம்!
இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளில் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த அதிகாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், அட்டவணைப்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நியமனங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.