வவுனியாவில் பரவிய காட்டுத் தீ:கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விமானப்படை
வவுனியா, பூவசங்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை விமானப்படை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பூவரசங்குளம் பகுதியை விரைவாக அடைந்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விமானப்படையின் இந்த உடனடித் நடவடிக்கை காரணமாக, அருகிலுள்ள வனக்காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் ஏற்பட இருந்த கடுமையான சேதங்களைக் கட்டுப்படுத்த முடிந்தது.
