மேற்கு கரை இஸ்ரேல் தயாரிப்புகளுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா தடை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து வா்த்தகத் தடையை அறிவித்துள்ளன.
இஸ்ரேலின் தொடா்ச்சியான குடியிருப்பு விரிவாக்கங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான ‘இரு நாடுகள்’ தீா்வுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்த ராஜீய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல், அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு கரையில் பாலஸ்தீனா்கள் இன அழிப்பு செய்யப்படுவதாக பிரிட்டன் கருதுகிறது. அமைதிக்கான இரு நாடுகள் தீா்வு அழிக்கப்படுவதை நாங்கள் வேடிக்கை பாா்க்கமாட்டோம்’ என்றாா்.
மேற்கு கரையின் இஸ்ரேல் குடியிருப்புகளில் இருந்து பெரும்பாலும் மதுபானம் மற்றும் வேளாண் விளைப்பொருள்களே ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்த வா்த்தகத் தடையால் இஸ்ரேலின் ஒட்டுமொத்த வா்த்தகத்தில் பெரிய அளவிலான பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படாது எனத் தெரிகிறது.
எனினும், மேலும் பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற வா்த்தகத் தடையை இஸ்ரேல் மீது விதிக்கத் திட்டமிட்டுள்ளதால், சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கான ராஜீய நெருக்கடி பலமடங்கு அதிகரித்துள்ளது.