;
Athirady Tamil News

இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி

0

இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.

இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், மெட்ரோ பேருந்து சேவையின் மொத்த எண்ணிக்கை இந்த மாதத்தில் 122 ஆக உயரும்.

மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.