;
Athirady Tamil News

முட்டை தாக்குதல்; ஆட்சி மாறியதும் தண்டனை உறுதி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் வரலாற்று தவறை செய்துவிட்டதாக தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை…

எரிபொருள் விலையை அதிகரிக்க யோசனை !!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், விலைவாசிக்கு ஏற்றவாறு எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் என, அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, நேற்று (10) தெரிவித்தார்.…

மு.க.ஸ்டாலினை முன்னுதாரணம் காட்டினார் விஜித ஹேரத் !!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமானவர்களே பொருளாதார பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்ணுதாரணம் காட்டியும் உரையாற்றினார்.…

வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள…

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை…

பிரான்ஸ் தூதருக்கு மனோ எம்.பி விடுத்த கோரிக்கை !!

ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், இலங்கையின் மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்த .தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்,…

திரையரங்குக்கு செல்ல ரஞ்சனுக்கு மறுப்பு !!

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரட்டை வேடத்தில் நடித்த திரைப்பட நிகழ்வு சவோய் திரையரங்கில் மார்ச் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அதில் கலந்துகொள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அனுமதிக்குமாறு…

வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)

ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது. குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற…

’மொட்டு’க்கு மைத்திரி பதிலடி !!

“எனது தலைமையில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றது. இதை விமர்சிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு எந்த அருகதையும் கிடையாது.” -இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.…

பரிசீலனையிலிருந்து விலகினார் நீதியரசர் !!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலிப்பதிலிருந்து விலகுவதாக, உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, இன்று (10) அறிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத்…

சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!

க.பொ.த சாதாரண தர 2020 பரீட்சையில் நடைமுறைப் பாடங்களுக்கான பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட முறைகள் மூலம் மீள்…

இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர்!!

இலங்கை பெண்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் என பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தோனேஷியாவின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…

எரிபொருள் விலை திடீர் உயர்வு- லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவிப்பு!!

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.…

தென்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!! (படங்கள்)

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில்…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா…

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி!! (வீடியோ)

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர்…

பாட்டலியின் எச்சரிக்கை !!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீர் மின்சாரத்தை உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால், நாட்டில் உள்ள முழு மின்சாரத் தொகுதியும் செயலிழக்க நேரிடும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி…

“முற்று முழுதாக நீக்குக” !!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல…

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு?

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.…

கோட்டா – சம்பந்தன் 15இல் நேரடிப் பேச்சு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை!! (படங்கள் &…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட…

திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம்…

கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை!

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு…

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…

மேலும் 113 பேர் பூரண குணம்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,616 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…

நிதி அமைச்சர் எங்கே?

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால்…

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு!!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 260 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக முன்னணி வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன. மேலும்,…

அதி கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை !!

மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர பகுதியில் உள்ள சில வர்த்தக…

தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை!!

அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும்…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு!! (படங்கள் & வீடியோ)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம்…

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா !!

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார…

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!!

இந்திய கடலோர காவல்படையினர் 5 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர் நேற்று கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவல்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட…

’ஊடகங்களும் ஜெனிவா செல்லும் நிலை வரும்’ !!

பேராயர் மெல்கம் ரஞ்சித்தை ஜெனிவா நோக்கி எவ்வாறு அரசாங்கம் தள்ளியதோ அதுபோல ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். தனிப்பட்ட…

’ஊடகவியலாளர்களை கொன்ற அரசாங்கம்’ !!

15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கமே தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளதாக கடுமையாக சாடிய எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் இச்சட்டமூலத்தை…