;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

பிரதமா் படுகொலை: உறுதிசெய்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்!

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் திரு. அம்ஹர் எம்.…

ஆசிட் குடிக்க வைத்த கணவன், மாமியார் ; இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற குடும்பம்

கூடுதல் வரதட்சணை கேட்டு வாயில் ஆசிட் ஊற்றி குடிக்க வைத்து இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கணவன், மாமியார், மாமனாரிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்தவர் குல்…

எழுத்தாளர் எஸ்.எல். றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி

இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எழுத்தாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்முனை பகுதியில் உள்ள மையோன் பிளாஷா வரவேற்பு…

நிந்தவூர் பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நிந்தவூர் பகுதியில் இன்று(31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு…

மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

இயந்திரத்தில் தீப்பிடிக்கும் அபாயம் ; அவசரத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

புதுடெல்லியிலிருந்து, இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டுச்…

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் அடாடியில் ஈடுபட்ட பொலிஸார்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, பொலிஸார் முதியவர்கள், பெண்கள் என…

ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் மீதான தாக்குதல் ; இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காசா பகுதியில் கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் தொடர்ந்தும் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அன்றைய தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர்…

நேரடி ஒளிபரப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டாக்!

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

பிரபல முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலைய…

மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்டப் பணிகள் தொடக்கம்

Qமயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா…

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன்

இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடித்துக் கொல்லப்பட்ட காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது…

கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட ஈ. தயாரூபன், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட F. C. சத்தியசோதி இன்றைய தினம் (01.09.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக்கடிதங்களை…

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும்…

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு,…

மீண்டும் கைகோர்க்கும் ரணில் – சஜித் பிரேமதாச; மஹிந்த , மைத்திரிக்கும் அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக…

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடும் நாடக ஆற்றுகைகளும்

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடாத்திய குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.…

யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மரவள்ளி தோட்டத்தை பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ,…

மராட்டியம்: நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய லாரி – 6 பேர் பலி

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் நமல்ஹான் பகுதியில் உள்ள சாலையோர நடைபாதையில் நேற்று காலை 7.30 மணியளவில் பலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாலையில் வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில்…

உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு கிடைத்த கௌரவம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத்…

ஜனாதிபதி அநுர இன்று யாழ் விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு…

கனடாவின் இந்தப் பகுதியில் கடுயைமான காட்டுத்தீ

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பமும் வறட்சியும் நீடிப்பதால் காட்டுத் தீகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாகாணம் முழுவதும் 142 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த புதன்கிழமை பதிவு…

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மொனராகலை - செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே…

இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன…

யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

யாழ்.கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-கிளானையில் மின்சாரம் தாக்கி நேற்று குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர்…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் தற்போது அதன் வரலாற்றிலேயே மிகப்பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சட்லெஜ், செனாப் மற்றும் ராவி நதிகளில் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால் சுமார் 2 மில்லியன் மக்கள்…

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு!

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சிறப்பு சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது. நாட்டின்…