;
Athirady Tamil News

இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம்! பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

0

இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பஸ்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தனர்.

பாரிய நிலத்தடி நீர் ஆதாரம்
சிறிய வறட்சி நிலவினாலும் ஊருபொக்க பகுதியில் உள்ள கிணறுகள் வற்றிப்போவதால், மக்கள் குடிநீருக்காக பவுசர்களை எதிர்பார்க்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த நீர் தட்டுப்பாட்டினால் ஊருபொக்க நகரம், தம்பஹல வீதி, ஹுலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹேன்கொட, ஹொரகஸ்மண்டிய, கடுவன வீதி மற்றும் கீரபிட்டிய உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன், ஹீகொட வைத்தியசாலை மற்றும் ஹுலங்கந்த, பட்டிகல, கீரபிட்டிய, கின்னலிய, பெரலபனாதர ஆகிய பாடசாலைகளின் அன்றாடச் செயல்பாடுகளும் முடங்கியிருந்தன.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
பஸ்கொட பிரதேச சபையின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே இந்த பாரிய நீர் ஆதாரம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகேயின் மேற்பார்வையில் இந்த நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.