;
Athirady Tamil News
Yearly Archives

2025

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ ; அச்சத்தில் மக்கள்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில்…

‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.…

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து…

கத்தார் உதவியுடன்… 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப்கன் மக்களின் விண்ணப்பங்கள்…

வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை…

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடமாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப்…

தெஹிவளை துப்பாக்கிச் சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று(18) நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில்…

வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. இஸ்ரேலின்…

பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !

பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர். பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.…

யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றையதினம் (18) வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த போது…

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்றும் குவாங்சு நகரம் உள்ளிட்ட ஏராளமான…

இலங்கையில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத்…

இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாகும் காரணத்தால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை,…

யாழில் கோர விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்த நபருக்கு நேர்ந்த சோகம்

யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி, வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த 71வயதுடைய…

பரோல் கைதியை மருத்துவமனைக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற கும்பல்.., வெளியான அதிர்ச்சி வீடியோ

பரோலில் வெளிவந்த கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்து கும்பல் ஒன்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் சந்தன் என்பவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில்…

கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் நேற்று (ஜூலை 18) செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அந்நாட்டின்…

டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியா…

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய்…

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள அதன் முந்தைய காலனி நாடுகளில்,…

இலங்கையில் கைதான 21 இந்திய பிரஜைகள் ; பெரும் மோசடி செயல் அம்பலம்

இணையவழி மோசடியில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின், புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசாவின் மூலம் நாட்டிற்கு வந்து இந்த குழுவினர், விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக…

மூவரின் DNA; பரம்பரைக்கே நோய் வராது

இங்கிலாந்தில் மூவரின் டி.என்.ஏவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள், பரம்பரை நோயின்றி பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையில் இங்கிலாந்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தாய் மற்றும்…

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்படும்…

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு வழங்குவேன் –…

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர்…

பெண் Anime அவதார்களை உருவாக்கினால் ரூ.3.7 கோடி வரை சம்பளம்! எலான் மஸ்க்கின் XAI நிறுவனம்!

எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, பெண் அனிமே(Anime) கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் AI அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை பிரமாண்ட சம்பளம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.…

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்கள்; இறுதி திகதி 2025 ஜூலை 31!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட…

பதவியிழக்கும் அபாயத்தில் பிரான்ஸ் பிரதமர்: ஒரு சர்ச்சைப் பின்னணி

எட்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பிரான்ஸ் பிரதமருக்கு மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. சர்ச்சைப் பின்னணி பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து…

சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை…

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

நுவரெலியா - ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு கடையில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புத் துறை அதிகாரிகள்…

இலங்கையில் 80 வயதான பெண்ணின் மரணதண்டனை இரத்து

இலங்கையில் 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்காக 80 வயதுடைய ஒரு பெண்ணுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அம்பலாந்தோட்டையில்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க திட்டம்

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்கப்பட உள்ளது. வாக்களிக்கும் வயது பிரித்தானியாவில் 1969 ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் திட்டத்தை…

உக்ரைனில் உளவுபார்த்த அமெரிக்கருக்கு குடியுரிமை வழங்கிய ரஷ்யா

உக்ரைனில் ரஷ்யாவிற்காக உளவுத் தகவல்கள் வழங்கிய அமெரிக்கர் ரஷ்யப் பாஸ்போர்ட் பெற்றார். டேனியல் மார்டின்டேல் என்ற அமெரிக்கப் பிரஜை, உக்ரைனில் ரஷ்யா பக்கமாக செயல்பட்டு ரஷ்ய இராணுவத்திற்கு உளவுத் தகவல்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவர்…

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி…

மாணவர்களை உள நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் – அரசாங்க…

பாடசாலை மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…