;
Athirady Tamil News
Yearly Archives

2025

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் ரத்து

இந்த ஆண்டு இறுதியில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்காவின் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்…

7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: முக்கிய மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வடமேற்கு மாகாணமான அலாஸ்காவின் கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உள்ளூர் நேரப்படி, சுமார்…

முல்லைத்தீவு ஆற்றில் சடலமொன்று மீட்பு

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. சின்னாற்றுக்குள் உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல்…

ஈராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

ஈராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்த சில நாள்களாக தாக்குதல்கள்…

வேனில் கடத்தப்பட்ட சிறுவன் பாய்ந்து தப்பினார்!

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. சிறுவனை கடத்தியதாக…

நிதி மோசடி வழக்கில் குடும்பத்தோடு சிக்கிய கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இலஞ்ச ஊழல்…

யாழ்ப்பாணத்தில் வயலுக்குள் பாய்ந்து பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது…

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:…

கனடாவில் ஆற்றில் விழுந்த இந்திய இளைஞர்: சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் சோகம்

கனடாவில், ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்று உயிரிழந்த இந்திய இளைஞரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பந்தை எடுக்க ஆற்றில் குதித்த இளைஞர் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 6ஆம் திகதி மாலை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops…

வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாடு நாளை கோப்பாயில்

யாழ்ப்பாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது விவசாய…

‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில்…

பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு…

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைலையில் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…

தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர் பலாலி இராஜ…

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உக்ரைன் மீது ரஷியா தீவிர வான்வழித்…

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் நேற்று (ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.…

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு கப்பல் பயணிகளுக்கு விசேட சலுகை

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன்…

கொழும்பில் வீட்டின் அருகே சடலம் மீட்பு ; கொலையா? பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதை…

கடல் கொந்தளிப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. அதன்படி புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம்…

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு…

கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஷார்ஜாவில் தனது ஒரு வயது மகளுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 32 வயது பெண் விபன்சிகா. இவருக்கும் நிதீஷ்…

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து…

பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க யாழில். விழிப்புணர்வு நடவடிக்கைகள் .

பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்ட செயலர்…

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களுக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்…

யாழ் . மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள் – ஆதாரங்கள் உண்டு என கபிலன்…

யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதத்துக்கான அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் நேற்றைய…

இரவு 7 மணி வரை நீடித்த யாழ் . மாநகர சபை அமர்வு – துணை முதல்வரும் காரணம் என…

யாழ்ப்பாண மாநகர சபை துணை முதல்வரின் செயற்பாட்டினால் சபை அமர்வு இரவு 07 மணி வரையில் நீடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாநகர சபை…

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கவில்லை

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச…

மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன்…

காஸாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் போது வெடித்த வன்முறை ; 20 பேர் பலி

காஸாவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர். காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா…

இலங்கையில் ஒற்றை யானையின் உயிரை காக்க போராடும் ஊரவர்கள்

"கண்டலமே ஹெடகாரயா" என்று அழைக்கப்படும் காட்டு யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக அது பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு…

சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு ; விரைவில் வழங்கப்படவுள்ள நியமனங்கள்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். வடமாகாண சுகாதார சேவை…

காதலியை எரித்து கொல்ல முயன்ற 40 வயது காதலன் ; தகாத உறவால் நேர்ந்த வினை

தகாத உறவு ஜோடி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற காதலனை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருபவர் ராமு (40).…

யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர்

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலட்சியத்தால் பறிபோன உயிர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

இரகசியமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள்

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பிரித்தானியாவிற்கு குடியேற விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின்…

அவுஸ்திரேலியாவில் திருந்திய பாடசாலை மாணவர்; புகைத்தல் குறைந்தது

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும் மின் சிகரட்டுக்கள் (vaping)…

நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்: அனைவரும் ஒரே நாளில் பிறந்த ஆச்சரியம்

அமெரிக்காவில் பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை ஒரே நாளில் பெற்றெடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நௌஷே டிரேக் என்ற பெண், கடந்த 7ஆம் திகதி ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். இது அவரது நான்காவது…