;
Athirady Tamil News

கிருஷ்ணர் உருவாக்கிய ‘துவாரகை’ உண்மையில் உள்ளதா? கடலுக்கடியில் கிடைத்தது என்ன? (கட்டுரை)

0

குஜராத்தின் துவாரகை மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள ‘சப்தபுரி’களில் ஒன்றான துவாரகை, இந்துகளின் நான்கு புனித தலங்களில் ஒன்றாகும்.

இந்து நம்பிக்கையின்படி, இந்த நகரம் முதலில் கிருஷ்ணரால் நிறுவப்பட்டது. அவர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்த நகரம் தண்ணீரில் மூழ்கியதாக நம்பப்பட்டது.

அந்த நகரம் மூழ்கிய நேரத்தைத் கணிப்பது ஒரு கடினமான பணியாகும், ஆனால் அதைச் சுற்றி ஊகிக்கக்கூடிய வகையிலான ஆதாரங்கள் உள்ளன.

துவாரகை கடலில் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மூலம் சில சுவாரஸ்யமான பொருட்களையும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளன

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பேரழிவுகள், பிரளயங்கள், எரிமலைகள் போன்ற நிகழ்வுகளில் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்குவது போன்ற நம்பிக்கைகளுக்கு பஞ்சமில்லை.

இந்த நிலையில், 1966 ஆம் ஆண்டில் புவியியல் துறையில் புவியியல் சார்ந்த நம்பிக்கைகள் என்ற ஒரு துணை பிரிவை நிறுவினார் விஞ்ஞானி டோராட்டி விட்டலியானோ. இது ‘புராணம் அல்லது புராணத்தின் பின்னால் உள்ள புவியியல் நிகழ்வை’ ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.

ஜராசங்கர் 17 முறை மதுரா மீது படையெடுத்தார். ஒவ்வொரு முறையும் கிருஷ்ணனும் பலராமனும் தங்கள் நகரத்தை பாதுகாத்தனர்.

இந்து மத நம்பிக்கையின்படி, பிரம்மா ‘படைப்பை உருவாக்கியவர்’, விஷ்ணு ‘படைப்பை நிலைநிறுத்துபவர்’, சிவன் ‘படைப்பை அழிப்பவர்’.

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்த நாள் துவாரகை, மதுரா உள்ளிட்ட நாடு முழுவதும் ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

இந்துகளின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் மகாபுராணம், கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு, மதுராவுக்குத் திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

இது தவிர, ‘மகாபாரதம்’, ‘விஷ்ணுபுராணம்’ உள்ளிட்ட நூல்களும் இவரைப் பற்றி குறிப்பிடுகின்றன.

‘ஸ்ரீமத் பகவத் மகாபுராணம்’ மற்றும் இதிகாசமான ‘மகாபாரதம்’ ஆகியவற்றின் படி, கிருஷ்ணன் கம்சனைக் கொன்றது, மகதத்தின் ஆட்சியாளரான ஜராசங்கனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் கம்சா அவனது இரண்டு மகள்களான அஸ்தி மற்றும் பிரக்ஷியின் கணவர்.

ஜராசங்கர் 17 முறை மதுரா மீது படையெடுத்தார். ஒவ்வொரு முறையும் கிருஷ்ணனும் பலராமனும் தங்கள் நகரத்தை பாதுகாத்தனர்.

அதற்கு பிறகு, 18 வது முறை, மதுராவின் வீழ்ச்சி உறுதியாகத் தோன்றியபோது, ​​அவர் நகர மக்களை துவாரகைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து குடியமர்த்தினார்.

ஒரு புதிய நகரத்தை கட்டுவதற்காக கிருஷ்ணர் கடலில் இருந்து 12 யோஜன்கள் நிலத்தை வாங்கியதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். இது தேவர்களின் ஸ்தபதி (கட்டிடக்கலைஞர்) மனதா விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இதில் கிருஷ்ணரின் 16 ஆயிரத்து 108 மனைவிகளுக்கான அரண்மனைகளும், நகரவாசிகளுக்கான குடியிருப்புகளும் இருந்தன.

கிருஷ்ணர் போர்க்களத்தை (பாலைவனம்) விட்டு வெளியேறியதால், அவர் ‘ராஞ்சோட்’ என்று அழைக்கப்பட்டார், மேலும் துவாரகையின் நிறுவனர் என்பதால், அவர் ‘துவாரகாதீஷ்’ என்ற பெயர் பெற்றார்.

‘ஸ்ரீமத் பகவத் மகாபுராணத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ளபடி , கிருஷ்ணர், 125 ஆண்டுகள் பூமியை ஆண்ட பிறகு, வைகுண்ட வாசியானார்

இந்து நம்பிக்கையின் படி, ராமர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம். ‘ராமாயணம்’ அவரது வாழ்க்கை வரலாறு போன்றது. அவர் ‘மரியா புருஷோத்தம்’, கிருஷ்ணர் ‘பூர்ண புருஷோத்தம்’. அவர் இறந்த பிறகு துவாரகையில் பிரளயம் ஏற்பட்டது.

இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் கே. கே. முகமது, மகாபாரதத்தின் காலம் கிமு 1,400 அல்லது 1,500 என்கிறார். இதுவே சரியான நேரம் என்று தொல்பொருள் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏ.எஸ்.ஐ.யின் பணி ஆய்வு, அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகும்.

‘ஸ்ரீமத் பகவத் மகாபுராணத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ளபடி , கிருஷ்ணர், 125 ஆண்டுகள் பூமியை ஆண்ட பிறகு, வைகுண்டவாசியானார். அதன் பிறகு, அரண்மனையை விட்டு வெளியேறிய கடல், நிலம் முழுவதையும் கைப்பற்றியது.

இருப்பினும், இந்துகளின் மத நம்பிக்கைக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கால மதிப்பீடுகளுக்கும் இடையே சுமார் 1,500 ஆண்டுகள் இடைவெளி உள்ளது.

புராணங்கள் மற்றும் அக்கியானங்களின் அறிஞரான தேவதத்த பட்நாயக் (துவாரகையின் ராஜ்யம், டிஸ்கவரி சேனல்) பேசுகையில், “குருக்ஷேத்திரப் போர் முடிந்ததும், கிருஷ்ணர், கௌரவர்களின் தாயான காந்தாரியைச் சந்திக்கச் சென்றபோது, ​​அவள் கிருஷ்ணரின் வாரிசுகளை சபித்தாள். உன் கண் முன்னே வம்சம் அழியும் என சபித்தாள். 36 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தாரியின் சாபம் நிறைவேறியது, கிருஷ்ணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்கிறார் அவர்.

இந்து நம்பிக்கையின்படி, கௌரவர்களும் பாண்டவர்களும் குருஷேத்திர பாலைவனத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர். பாண்டவர்களின் பெரிய வில்வீரன் அர்ஜுனனின் அவர்களுக்கு முன் இருந்தார்.

இருப்பினும், தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களை அவர் முன்னால் பார்த்ததால், அர்ஜுனனுக்கு இந்தப் போரைச் செய்ய தைரியம் இல்லை.

அத்தகைய நேரத்தில், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனை மதத்தைப் பாதுகாக்கவும், க்ஷத்ரிய தர்மத்திற்காகப் போராடவும் அறிவுறுத்துகிறார்.

பின்னர் 18 நாட்கள் போர் நடக்கிறது, அதில் பாண்டவர்கள் இறுதியாக வெற்றி பெறுகிறார்கள். கீதை முடிக்கப்பட்ட நாளை ‘கீதா ஜெயந்தி’ என்று தலைமுறைதலைமுறையாக இந்துகள் கொண்டாடி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 160 வது கீதா ஜெயந்தி கொண்டாடப்படும் . இவ்வாறு குருக்ஷேத்திரப் போருக்குப் பின், காந்தாரியின் சாபம் நிறைவேறுவதற்கு சுமார் 36-37 ஆண்டுகள் கழிந்தன.

துவாரகை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அழிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர்

1960 களின் முற்பகுதியில், துவாரகையில் உள்ள ஜகத் கோயிலுக்கு அருகில் ஒரு வீட்டை இடிக்கும் போது கோயிலின் மேல்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பதாம் நூற்றாண்டு விஷ்ணு கோவிலின் எச்சங்கள் காணப்பட்டன.

மற்ற இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போதும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அகழ்வாராய்ச்சி தொடர்ந்தபோது முன்னதாக அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று மீட்டரில் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வு தொடர்ந்தபோது பொருட்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், துவாரகை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அழிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். துவாரகை ஆறு முறை மூழ்கியிருப்பதாகவும், தற்போதைய துவாரகை ஏழாவது துவாரகை என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

கர்நாடகாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ஷிகாரிபுரா ரங்கநாத் ராவ், குஜராத்தை தனது சொந்த ஊராகக் கொண்டதால், அங்கும் கடலிலும் அதிக ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசியானோகிராஃபியில் நீருக்கடியில் தொல்லியல் ஆராய்ச்சி செய்யும் துறையில் முன்னோடியாக இருந்தார்.

1989 ஆம் ஆண்டில், கடல் நீர் ஆய்வுகளில், கடல் புல் மற்றும் மணலுக்கு அடியில் செவ்வக கற்களைக் கண்டுபிடித்தன,

இது ஒரு கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். இது தவிர, மனிதனால் உருவாக்கப்பட்ட அரை வட்டக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கல் நங்கூரங்கள் காணப்பட்டன, அதில் உளி கொண்டு துளைகள் செய்யப்பட்டன. ஏறக்குறைய ஒரே வடிவத்தில் இருக்கும் கல் சுண்ணாம்பு ஆகும். இவை பல நூற்றாண்டுகளாக சுற்றியுள்ள பகுதியில் ஏராளமாக காணப்பட்டுள்ளது. இது ஒன்றோடொன்று இணைக்க அல்லது மரத்தால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இது தவிர, மண்பாண்டங்கள், ஆபரணங்கள், முத்திரைகளும் கிடைத்தன. இந்த வகை நாணயங்கள் ஓமன், பஹ்ரைன் மற்றும் மெசபடோமியா ஆகிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. துவாரகையைச் சுற்றிலும் பல தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

2007 கணக்கெடுப்புக்கு முன், கடலில் 2*1 கடல் மைல் பரப்பளவில் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் நீர் வரத்து கணிப்பு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் 200 சதுர மீட்டர் பரப்பளவு கட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது (வரைபடத்தில் உள்ளதைப் போல செங்குத்து மற்றும் கிடைமட்ட கோடுகளால் வரையப்பட்டது).

இறுதியாக 50 சதுர மீட்டர் பரப்பளவில் குறியிடல் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்திய தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அலோக் திரிபாதி முன்பு ஒரு முறை பிபிசியிடம் பேசுகையில் , “1979 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையால் மற்றொரு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அதில் சில கப்பல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கிமு 2000 க்கு முந்தையவை என்று நம்பப்படுகிறது.

அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. துவாரகையைச் சுற்றிலும் பல தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “மிகவும் நன்றாக வர்ணம் பூசப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களைப் பயன்படுத்தப்பட்ட பாலிக்ரோம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மேற்பரப்பில் கருப்பு நிறத்துடன் கூடிய பைக்ரோம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”என்றார்.

“500 க்கும் மேற்பட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் கார்பன் டேட்டிங் எத்தனை கட்டங்களாக கலாச்சாரம் வளர்ந்திருக்கலாம் என்பதை நிரூபிக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கிமு 2000 க்கு முந்தையவை. கடலின் ஆழத்திலிருந்து கல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த பகுதியில் கடல் நீரோட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், மண்பாண்டங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆராய்ச்சி தளத்தில் உள்ள அலையின் அடிப்பகுதி காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே நீருக்கடியில் டைவிங் செய்ய ஏற்றது.

சோனார் சமீபத்திய ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது கடற்பரப்பில் ஒலி அலைகளை வெளியிடுகிறது. அதன் எதிரொலிகளின் அடிப்படையில் கீழே உள்ள திடப்பொருட்களின் இருப்பை கணிக்கிறது.

இது தவிர, ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்), மோஷன் சென்சார் மற்றும் இதர சென்சார்கள் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்த பொருட்களின் இருப்பிடத் தகவல் பெறப்படும்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடல் மட்டத்தின் உயர்வு மற்றும் வீழ்ச்சி குறித்து பேசுகையில், சிஎஸ்ஐஆர்-என்ஐஓ (CSIR-NIO) யின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜீவ் நிகம், “சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் மட்டம், இப்போது இருப்பதை விட 100 மீட்டர் குறைவாக இருந்தது. பின்னர் கடல் மட்டம் மீண்டும் கொஞ்சம் உயர்ந்தது. 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் மட்டம், இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது” என்றார்.

“பின்னர் அது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் வீழ்ச்சியடைந்தது. அந்த நேரத்தில் துவாரகை நகரம் நிறுவப்பட்டது. ஆனால் பின்னர் கடல் மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. அதனால், நகரம் மூழ்கத் தொடங்கியது.” என்றார் ராஜீவ்

ஆராய்ச்சி தளத்தில் உள்ள அலையின் அடிப்பகுதி காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே நீருக்கடியில் டைவிங் செய்ய ஏற்றது.

நாட்டில் நீருக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகக் குறைவாக இருப்பதால், இந்த ஆராய்ச்சி மெதுவான நடக்கிறது. தொல்லியல் ஆய்வாளர் (ஏஎஸ்ஐ-யில் இருந்து ஓய்வு பெற்றவர்) கே. கே. முஹம்மது கூறுகையில், அரசாங்கம் ஆராய்ச்சிக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றார்.

ஆஸ்திரேலியாவின், மேற்கு சாலமன் தீவுகள் குழுவில், சாண்டோரினி (கிரீஸ்) தீவிலும் ஒரு ‘மூழ்கிவிட்ட நகரம்’ என்ற நம்பிக்கை உள்ளது. கடல் மட்டம் உயர்வதால் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியதாக ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் நம்புகின்றனர். அவர்கள் மத்தியில், இதுபோன்ற 21 புராணக்கதைகள் பரவலாக உள்ளன.

இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள மகாபலிபுரத்திலும் இத்தகைய நம்பிக்கை நிலவுகிறது. 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது கடலுக்கு வெளியே சில பகுதிகள் தோன்றியதாக தெரியவந்துள்ளது.

துவாரகை குஜராத்தின் மேற்கு விளிம்பில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , சூரத், கட்ச், பாவ்நகர் மற்றும் பருச் ஆகியவை பாதிக்கப்படலாம்.

ஜாம்நகர், தேவபூமி துவாரகை, போர்பந்தர், ஜூனாகத், அம்ரேலி, நவ்சாரி, வல்சாத் மற்றும் கிர்சோமநாத் ஆகியவை லேசாக பாதிக்கப்படலாம். இதுதவிர மீண்டும் கட்ச் பகுதி மீண்டும் ஒரே தீவாக மாறிவிடும் என்ற அச்சமும் கடல் மட்டம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.