;
Athirady Tamil News

புட்டின் திறந்த போர்முனை

0

இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்­வ­லை­களை சர்­வ­தேச மட்­டத்­திலும், பிராந்­திய மட்­டத்­திலும் ஒடுக்கு முறைக்கு எதி­ராக போராடும் இனங்­களின் தேசிய மட்­டங்­க­ளிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அண்­மைக்­கால பனிப்­போரின் விளை­வுகள் தான் இவை. இப்போர் சர்­வ­தேச அர­சி­யலின் போக்கை துலாம்­ப­ர­மாக வெளிக்­காட்­டி­யுள்­ளது. அமெ­ரிக்கா கட்­டி­யெ­ழுப்­பிய ஒரு மைய உலகம் சரிந்து போவ­தற்­கான அடை­யாளம் இது ­வெ­னலாம்.

இரண்டாம் உலக யுத்­தத்­திற்கு பின்னர் இரு மைய உலகம் தோற்றம் பெற்­றது. சோவியத் யூனி­யனின் வீழ்ச்­சிக்கு பின்னர் ஒரு மைய உல­க­மாக மாறி­யது. பிராந்­திய வல்­ல­ர­சு­களின் எழுச்­சிக்குப் பின்னர் இது பல ­மைய உல­க­மாக மாறி அதன் வளர்ச்சிப் போக்கில் இது இரு அணி மைய உல­க­மாக மாறி­யுள்­ளது. இரு தலைமை , ஒரு தலைமை என்­பன கூட்­டுத்­த­லை­மை­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. பல மைய அதி­கா­ரத்தின் நலன்­களே இரு கூட்டு அணித்­த­லை­மை­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம், ஜப்பான், அவுஸ்­ரே­லியா என்­பன ஒரு கூட்டு அணி­யாக உள்­ளன. மறு பக்­கத்தில் ரஷ்யா, சீனா, வட­கொ­ரியா ஈரான், சிரியா என்­பன ஒரு கூட்டு அணி­யாக உள்­ளன. தற்­போது இதற்குள் சில ஆபி­ரிக்க நாடு­களும் அடக்கம். இதற்­கான சூழ­லையும் நிர்ப்­பந்­தத்­தையும் ரஷ்ய – உக்ரேன் போர் உரு­வாக்கி விட்­டது.

ரஷ்­யாவின் கொல்­லைப்­பு­றத்தில் அமெ­ரிக்க அணி ஆக்­கி­ர­மிப்பு செய்ய முற்­பட்ட போதே ரஷ்ய – உக்ரேன் போர் ஏற்­பட்­டது. தற்­போது புட்டின் அமெ­ரிக்­காவின் கொல்­லைப்­பு­றத்தில் போர் முனை­யைத்­தி­றந்­தி­ருக்­கின்றார். பலஸ்­தீன -– இஸ்ரேல் பிர­தேசம் அமெ­ரிக்­கா­விற்கு வெகு தொலைவில் இருந்­தாலும் அமெ­ரிக்கா நலன்­களைப் பொறுத்­த­வரை இப்­பி­ர­தேசம் அமெ­ரிக்­காவின் கொல்­லைப்­புறம் தான்.

அமெ­ரிக்­காவின் உள்­ளக கட்­ட­மைப்பில் யூதர்­களின் ஆதிக்கம் அதிகம். அவர்­களின் நலன்­களை புறக்­க­ணித்து விட்டு அரச அதி­கார கட்­ட­மைப்பை சிறப்­பாக மேற்­கொள்ள முடி­யாது. வெளி­யக நலனைப் பொறுத்த வரை மத்­திய கிழக்குப் பிராந்­தியம் அமெ­ரிக்­கா­வுக்கு முக்­கி­ய­மா­னது. கேந்­திர நலன்­களும் பொரு­ளா­தார நலன்­களும் அங்கு இருக்­கின்­றன. இஸ்ரேல் –- பலஸ்­தீன பிர­தேசம் கேந்­திர அடிப்­ப­டையில் முக்­கி­ய­மான பிர­தேசம். ஆசிய – ஐரோப்­பிய – ஆபி­ரிக்க கண்­டங்­க­ளுக்கு மத்­தியில் அது இருக்­கின்­றது. இதன் மூலம் உலக அதி­கார சம­நி­லையை பேணு­வ­திலும் முக்­கிய இடத்தை வகிக்­கி­றது.

பொரு­ளா­தார நலன்­களைப் பொறுத்­த­வரை மத்­திய கிழக்கு எரி­பொ­ரு­ளுக்­கான தங்கச் சுரங்கம். அமெ­ரிக்­காவின் எண்ணெய் கம்­ப­னிகள் அங்கு வலு­வாக காலூன்றி உள்­ளன. இவற்­றை­யெல்லாம் நீண்ட காலத்­திற்கு பாது­காக்க வேண்­டிய தேவை அமெ­ரிக்­கா­வுக்கு உண்டு.

மத்­திய கிழக்கின் இஸ்­லா­மிய நாடு­க­ளு­ட­னான உறவு எப்­போதும் ஏற்ற, இறக்­கத்­திற்கு உள்­ளாகக் கூடி­யவை. அந்த ஏற்ற இறக்­கத்தை சம­நி­லைப்­ப­டுத்­தக்­கூ­டிய அதி­கார பலம் ஒன்று அமெ­ரிக்­கா­வுக்கு மட்­டு­மல்ல மேற்­கு­ல­கத்­திற்கும் தேவைப்­பட்­டது. தவிர குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு 2 ஆம் உலக யுத்­தத்தின் பின்னர் தமது நாடு­களில் ஏற்­பட்ட யூத நெருக்­க­டிக்கும் தீர்வு காண வேண்­டி­யி­ருந்­தது. இந்த நலன்கள் ஒன்று சேர்ந்து தான் இஸ்ரேல் என்ற யூத நாடு உரு­வாக்­கப்­பட்­டது. வல்­ல­ர­சு­களின் உத­வி­யுடன் அதன் இரா­ணுவ பலம் அப­ரி­த­மாக வளர்க்­கப்­பட்­டது.

யூதர்­க­ளிடம் இயல்­பா­கவே உள்ள ஆற்­றல்­களும், யூத தேச வாதமும் இதனை ஊக்­கு­வித்­தன. இஸ்ரேல் என்ற நாடு உரு­வா­னதை தொடர்ந்து அரபு நாடுகள் பல யுத்­தங்­களை இஸ்­ரேலில் மேற்­கொண்­டன. அவை எல்லாம் தோல்­வியில் முடி­வ­டைந்­தன. யுத்த வெற்­றி­யைச்­சாட்­டாக வைத்து பலஸ்­தீ­னத்தின் நிலங்­க­ளையும் வெகு­வா­ரி­யாக அப­க­ரித்துக் கொண்­டது. பலஸ்­தீன மக்கள், மேற்குக் கரை காஸா என்­கின்ற சிறிய நிலப்­ப­கு­திக்குள் சுருக்­கப்­பட்­டனர்.

இரா­ணுவ ரீதி­யாக இஸ்ரேல் அணு ஆயு­தங்­க­ளையும் உள்­ள­டக்­கிய பல­மான நாடாக இருப்­ப­தனால் சூழ­வுள்ள அரபு நாடுகள் இஸ்­ரே­லுடன் மோது­வ­தற்கு அச்ச நிலையில் உள்­ளன. போரில்லா இணக்­கப்­பாட்டு நிலைக்கே செல்ல முயற்­சிக்­கின்­றன. எல்­லைப்­புற நாடு­க­ளான எகிப்தும், ஜோர்­தானும் இதில் மிக எச்­ச­ரிக்­கை­யாக உள்­ளன ‘கேம்ப் டேவிட்’ ஒப்­பந்­தத்­திற்கு இந்த அச்­சத்­தி­லேயே அவை உடன்­பட்டுச் சென்­றன. தற்­போது எல்லை நாடு­களில் லெப­னானும் சிரி­யாவும் மட்­டுமே சற்று தள்­ளி­யுள்­ளன.

பலஸ்­தீன அக­திகள் லெப­னானில் அதி­க­மாக இருப்­பதால் லெப­னான் இஸ்­ரே­லுடன் நெருங்­கு­வதில் தடைகள் உண்டு. தவிர பலஸ்­தீனம் சார்ந்த ஹிஸ்­புல்லா இயக்­கமும் அங்கு பல­மாக இருக்­கின்­றது. சிரி­யா­வுக்கு ‘கோலான்­குன்று’ தக­ராறு இஸ்­ரே­லுடன் உண்டு. கோலான்­குன்று பிர­தே­சத்தை இஸ்ரேல் கைப்­பற்றி வைத்­தி­ருக்­கின்­றது. இதை விட சிரி­யாவில் ஈரான் சார்பு ஆட்­சியே அதி­கா­ரத்தில் உள்­ளது. இவையும் நெருங்கிச் செல்­வதில் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

முன்னர் அரபு தேசி­ய­வா­தி­க­ளான சதாம் ஹுசைனும், கடா­பியும் அமெ­ரிக்க –மேற்­கு­லக – இஸ்ரேல் கூட்டு ஆதிக்­கத்­திற்கு தடை­யாக இருந்­தனர். அத்­த­டையை அகற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே அவர்கள் அழிக்­கப்­பட்­டனர். தற்­போது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத இயக்­கங்­களே தடை­யாக இருக்­கின்­றன.

குறிப்­பாக, மத்­திய கிழக்குப் பிர­தே­சங்­களில் தேசி­ய­வா­திகள் பல­வீ­ன­மாகி உள்­ளனர். பலஸ்­தீ­னத்தின் மேற்கு கரைப் பிர­தேசம் பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் ஆதிக்­கத்தின் கீழ் இருக்­கின்­றது. எனினும் பல­மான நிலையில் இருக்­கி­றது என கூற முடி­யாது. அதி­க­ளவில் இஸ்­ரே­லுடன் இணங்கிப் போரும் அர­சி­ய­லையே அது பின்­பற்றப் பார்க்­கி­றது. ஆனால், அதனை திருப்­திப்­ப­டுத்தும் நிலை­யிலும் இஸ்ரேல் இல்லை. ஏறத்­தாழ இலங்கை அரசை ஒத்­த­நிலை தான்.

தற்­போ­தைய யுத்தம் எத்­திசை நோக்கிச் செல்லும் என இப்­போ­தைக்கு உறு­தி­யாக கூற முடி­யாது. இதில் அமெ­ரிக்க – மேற்­கு­லக இஸ்ரேல் கூட்டின் வியூகம் காஸாவில் ஹமாஸ் இயக்­கத்தின் ஆதிக்­கத்தை அகற்­று­வது தான். இதன் மூலம், காஸா மக்­களை சிதைந்த இனக் குழு­வாக மாற்­று­வது தான்.

விடு­த­லைப்­பு­லி­களின் ஆதிக்­கத்தை அகற்­றி­யது போன்ற முயற்­சி­களில் இறங்கக் கூடும். இந்த அகற்­றுதல் தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்­து­வ­தற்கு இலங்கைத் தீவில் பெரிய வெற்­றியை வல்­ல­ர­சு­க­ளுக்கு கொடுக்­க­வில்லை என்­பது வேறு கதை. புலிகள் இல்­லா­நிலை தெற்­கா­சியா தொடர்­பாக குறிப்­பாக இலங்கைக் தீவு தொடர்­பான அதி­காரச் சம­நி­லையை வெகு­வாக குழப்­பி­யி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலிகளைப் போல ஹமாஸ் இயக்­கத்தின் ஆதிக்­கத்தை அகற்­று­வது இல­கு­வாக இருக்கப் போவ­தில்லை. விடு­தலைப் புலி­க­ளுக்கு சர்­வ­தேச பலம் இருக்­க­வில்லை. எந்த ஒரு நாடும் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­க­வில்லை ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான பனிப்போர் காலமும் இருக்­க­வில்லை.

இந்­தியா மிகப் பெரும் தடைக்­கரு­வி­யாக இருந்­தது. ஆனால் ஹமாஸ் இயக்­கத்­திற்கு சர்­வ­தேச பலம் உண்டு. ஹமாஸ் இயக்­கத்தை அவ் இயக்­கத்­தினால் பாது­காக்க முடி­யா­விட்­டாலும் ரஷ்யா , சீனா, ஈரான் , வட­கொ­ரியா சிரியா என்­பன பாது­காக்­கவே முயற்­சிக்கும், ஹமாஸ் இயக்கம் ஒரு மதம் சார்­பான இயக்­க­மா­கவும் அதே வேளை பலஸ்தீன் தேசிய இயக்­க­மா­கவும் இருப்­பதால் மக்கள் ஆத­ரவும் நிறை­யவே உண்டு. பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­திற்கு இத்­த­கைய ஆத­ரவு இல்லை. அது போராட்ட அர­சி­யலிலும் தற்­போது முனைப்புக் காட்­டு­வ­தில்லை.

இங்கு ஒரு புதிய வளர்ச்சி உரு­வா­ன­தையும் கோடிட்டு காட்ட வேண்டும். பரம எதி­ரி­யாக விளங்­கிய ஷியா முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கும், சுனி முஸ்லிம் அமைப்­பு­களுக்கும் இடையே ஒருங்­கி­ணைவு ஏற்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே இதற்­கான பிள்­ளையார் சுழியை சீனாவின் முயற்­சியால் சவூ­திக்கும் , ஈரா­னுக்­கு­மி­டையே போடப்­பட்டு விட்­டது. ஷியா, சுனி முஸ்லிம் முரண்­பா­டுகள் இருக்கும் வரை மத்­திய கிழக்கு நாடு­களை ஒருங்­கி­ணைந்த செயற்­பாட்­டிற்குள் கொண்­டு­வர முடி­யாது. இந்த ஒருங்­கி­ணைப்பு சீன-– ரஷ்ய வியூ­கத்தின் வெற்றி என்றே கூற வேண்டும்.

ரஷ்ய அதிபர் புட்டின் வெளி­நா­டு­களில் ரஷ்யாவின் நலன்­களைப் பேணு­வ­தற்­காக தனியார் படை­களை உரு­வாக்­கி­யி­ருந்தார். சிரிய யுத்­தத்­திலும் , உக்ரேன் யுத்­தத்­திலும் அப்­படை பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அவ்­வா­றான படை­களை இங்கும் பயன்­ப­டுத்த முற்­ப­டலாம். இதை விட மத்­திய கிழக்கில் உள்ள இஸ்­லா­மிய ஆயுத இயக்க கங்­கங்­க­ளுக்கு தேவை­யான ஆயு­தங்­களை வழங்கி அவற்றைப் பலப்­ப­டுத்தும் முயற்­சி­யிலும் ரஷ்யா இறங்­கலாம். மத்­திய கிழக்கு நாடு­களும் தம் பங்­கிற்கு தேவை­யான உத­வி­களை வழங்கப் பார்க்கும்.

பலஸ்­தீனம் முழு­மை­யாக அழிக்­கப்­ப­டு­வதை சூழ­வுள்ள முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. அந்த நாடு­களை முழு­மை­யாகப் பகைத்துக் கொண்டு அல்­லது முழு­மை­யாக ரஷ்ய அணி­யிடம் தள்ளி விட்டு, அமெ­ரிக்க அணி தன்­னு­டைய நலன்­களை அங்கு பேண முடி­யாது.

இஸ்­லா­மிய நாடு­களின் தலை­மைகள் அமெ­ரிக்க அணி­யுடன் இணங்கிப் போனாலும் அந் நாட்டு மக்கள் பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வா­கவே இருப்பர். ஏற்­க­னவே இஸ்­லா­மிய நாடு­களின் கூட்டு இப்­போ­ருக்குப் பின்னர் இஸ்­ரே­லு­ட­னான உற­வு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கி­றது. அண்மைக் காலத்தில் அமெ­ரிக்கா மிகச் சிர­மப்­பட்டு இந்த உற­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. குறைந்த பட்சம் பலஸ்­தீனம், இஸ்ரேல் என்­கின்ற இரு­நாட்டுக் கோட்­பாட்­டிற்கு வராமல் மத்­திய கிழக்கில் அமை­தியைக் கொண்டு வர முடி­யாது. ஆனால் அந்த நிலையை நோக்கி நகர்­வ­தற்கு இஸ்ரேல் இன்­னமும் தயார் நிலையைக் காட்­ட­வில்லை.

இப் போரினால் ஏற்­பட்ட முத­லா­வது வெற்றி ரஷ்ய அதிபர் புட்­டி­னுக்­கு­ரி­யது. இன்னொரு போர் முனையை திறந்­ததன் மூலம் ரஷ்ய மீதான அழுத்­தத்தை அவர் குறைத்­தி­ருக்­கின்றார். உக்ரேன் தான் கைவி­டப்­பட்ட நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது. ‘அர­சனை நம்பி புரு­சனை கைவிட்ட நிலை’ அதற்கு. உக்ரேனா, இஸ்­ரேலா என்ற நிலை வந்தால் இஸ்­ரேலை தான் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம் தேர்ந்­தெ­டுக்கும். இஸ்­ரே­லுக்கு யுத்­தக்­கப்­பலை அனுப்­பி­யது போல உக்­ரே­னுக்கு அமெ­ரிக்கா யுத்த கப்­பலை அனுப்­ப­வில்லை.

ரஷ்யா மேலும் மேலும் போர் முனை­களைத் திறக்க முற்­ப­டலாம். தாய்வான், தென்­கொ­ரியா, ஆபி­ரிக்க நாடுகள் என போர் முனை­களைத் திறப்­ப­தற்கு ஏரா­ள­மான இடங்கள் உண்டு. பனிப்போர் என்று வந்து விட்டால் விடு­தலைப் போராட்ட சக்­தி­க­ளுக்கும் வலு­வான இடம் கிடைக்கும்.

தமிழ் மக்கள் இஸ்ரேல் –- காஸா போரி­லி­ருந்து கற்றுக் கொள்­வ­தற்கு நிறைய விட­யங்கள் உண்டு. அதில் ஒன்று என்ன நெருக்­க­டிகள் வந்­தாலும் தொடர்ச்­சி­யாக போரா­டு­வ­தாகும். பலஸ்­தீன மக்கள் 65 வரு­டங்­க­ளுக்கு மேலாக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் இழந்­த­வைகள் ஏராளம். எனினும் போராட்ட முனைப்பை இன்­னமும் கை வி­ட­வில்லை. காலத்­திற்கு காலம் தமக்­கான வெளி­களைக் கண்­டு­பி­டித்து அதற்­கூ­டாக தமது இருப்பை தக்­க­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பலஸ்­தீன பிரச்­சி­னையும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையும் ஒரே மாதி­ரி­யா­ன­வையே. இரண்டும் தேசியப் பிரச்­சி­னை­களே. குடி­யேற்றம் பிர­தான ஒடுக்கு முறைக் கரு­வி­யாக அங்கும் இங்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. காஸா­வுக்­குள்ளும் மேற்­குக்­க­ரைக்­குள்ளும் பலஸ்­தீன மக்கள் சுருக்­கப்­பட்­டது போல இங்கும் சுருக்கம் நிகழ்கின்றது.

பனிப்போர் காலம் தொடர்வதற்கே வாய்ப்புக்கள் உண்டு. அது தமிழ் மக்களுக்கும் பல சர்வதேச வெளிகளைத் திறந்து விடும். இவற்றை உரிய வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் தவறக் கூடாது. இந்தியா நடுக்கோட்டில் இருக்கும் வரை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கலாம் எனினும் முயற்சிகளை செய்துகொண்டிருக்க வேண்டும்.

இந்தியா பிராந்திய நலன்களுக்காக அமெரிக்காவுடன் கூட்டுச்சேர வேண்டிய கட்டாயம் உண்டு. பூகோள நலன்களுக்காக ரஷ்ய அணிப்பக்கம் இருக்க வேண்டிய தேவையும் உண்டு. எனினும் இந்தியாவிற்குள் நாம் வெளிகளைத் தேட வேண்டும்.

ஒருங்கிணைவு அரசியல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியம் நெருக்கடிக் காலங்களில் பலஸ்தீனத்திற்காக முஸ்லிம் உலகம் ஒருங்கிணைவைக் காட்டி வருகிறது.

தற்போதைய தேவை காழ்ப்பு ரீதியான விமர்சனங்கள் அல்ல. தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்வதே.

புதிய , புதிய விடயங்கள் அரங்கிற்கு வந்துள்ளமையால், தூக்கத்தில் இருக்கும் தமிழ்த்தரப்பை தட்டி எழுப்பும் மார்க்கங்கள் பற்றி எழுத முடியவில்லை அடுத்தடுத்த வாரங்களில் அவற்றிற்கு முயற்சிப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.