;
Athirady Tamil News

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..

0

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..
—————————-
கரவேட்டிக் கள்ளர் கண்ணகை அம்மனையும் தூக்குறாங்கள்……
பலகோடி செலவு செய்து கோயிலைக் கட்டி பெருமெடுப்பில் கும்பாபிசேகம் செய்தார்கள் கண்ணகிபுரத்து பண முதலைகள்.. இவர்கள் செய்த அடாவடி தில்லாலங்கடி வேலைகளைப்பார்த்து கண்ணகித்தாயே எழுந்து மீண்டும் மதுரைக்கே போயிருப்பா அவளவு விளம்பரம் வீண் செலவுகள் அதைவிட முழுமையாக கோயில் வேலையும் முடியவில்லை..

சரி விடையத்துக்கு வருவோம் 2025ம் ஆண்டிற்கான மகோற்சவப் பெருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றிருந்தது 11ம் திகதி தேர்த்திருவிழாவில் பல லட்சங்கள் பெறுமதியான (கோடியைத் தாண்டும் என்றும் சொல்கின்றார்கள்) நகைகள் களவாடப்பட்ட செய்தி மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆனாலும் ஒரு அன்பர் தனது முகநூலில் துணிச்சலுடன் என்று சொல்ல முடியா விட்டாலும் தனது மனக்குமுறலை கொட்டிப் பதிவிட்டிருக்கின்றார், பின்னர் வழமை போல் அழித்து விட்டார் அந்த வடியான வேலவன்..

களவு யார் எடுத்தார்கள்? வெளியில் இருந்து வந்தவர்களா? அல்லது ஊருக்குள்ள உள்ளவர்களா? அல்லது உள்ளுக்குள்ள உள்ளவர்களா? என பலத்த சந்தேகம் நிலவுகின்றது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்து ஊருக்குள்ள உள்ள கடைநிலைக் காவாலிகளை அதாவது ஊரான் வீட்டு யன்னல், கதவு, நிலை, ஓடு, இதர தளபாடங்களை களவாடி விற்று கசிப்பு, கஞ்சா, பியர், சாராயம், போதைக்குளிசை, பெண் பிள்ளைகளை சீரளிக்கும் கும்பல்களை வைத்து களவாடப்பட்டதா?

கலட்டிப் பிள்ளையார், கண்ணகை அம்மன் கோயில் திருவிழாக்களில் மட்டும் தான் மேற்சொன்ன காவாலிகள் விபூதிப்பட்டையும், உருத்திராட்சக் கொட்டையும், கலர்கலரா வேட்டியுமாய் *சாட்சாத் அந்த சிவபெருமானின் வாரிசுகள்* மாதிரி அம்மாளையும் தூக்குவாங்கள், அய்யரையும் தூக்குவாங்கள், ஐயாமணியர் கையால பொன்னாடையும் வாங்கி பெருமைப்படுவாங்கள்.

இந்தப் பன்னாடைகள்.காப்போத்தல் கசிப்புக்கே காலை நக்கித் திரிவார்கள், கனடா லண்டன் சுவிசு *சிவாஸ் கிடைச்சா சும்மா விடுவாங்களா*? எல்லாம் *எஞ்சாய் சாமி நீ கண்டுக்காத மாமி* எனும் நிலைதான்.

கண்ணகிக்கும் பொறுக்கவில்லைப் போலும் கோயில் திருவிழாக்கள் இப்போ விளம்பர விரும்பிகளால் நடாத்தப்படுவதால் போட்டிபோட்டு மாக்கற்றிங்க செய்ய துடிக்கின்றார்கள். நடமாடும் நகைக்கடைகள் போல் தம்மிடம் உள்ள தங்கநகைகள் எல்லாவற்றையும் உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் அடுக்கி *ஆகா மெல்லநட மெல்லநட மேனி என்னாகும்*? என்ற றேஞ்சுக்கு அலுக்கி குலுக்கிப்போனா அறுப்பாங்கள் தானே!

அட விழுவாங்களே கோயில் என்றால் பய பக்தியா இருக்க வேண்டும் பகட்டாக இருக்க கூடாது *எடுத்தவங்களுக்கு கொண்டாட்டம் குடுத்தவனுக்கு திண்டாட்டம்* அரோகரா அம்மாளாச்சிக்கு அரோகரா..
-தீவகன்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.