;
Athirady Tamil News

அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு, “M.F” ஊடாக உலருணவுப் பொதிகள் வழங்கல்..(வீடியோ படங்கள்)

0

அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு “M.F” ஊடாக உலருணவுப் பொதிகள் வழங்கல்..(வீடியோ படங்கள்)
###################################

கல்விக் கொடைவள்ளல் சமுக ஆர்வலர் அமரர் ஆறுமுகம் விஜயபாலன் அவர்களது முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் கொரோனா நோய் தொடர்பாக அவசரகால பயணத்தடை காரணமாக ஆதரவின்றி தனித்து வாழும் வயோதிபர்களுக்கும் சிறிய குழந்தைகள் அதிகமாக உள்ள குடும்பங்களுக்குமான உலருணவுப் பொதிகள் அன்னாரின் முதலாமாண்டு நினைவாக சுவிஸ் சொலோத்தூண் பகுதியில் வசிக்கும் புளொட் தோழர் லெலின் என அழைக்கப்படும் சிவகுரு செல்வபாஈலன் அவர்களின் அன்பு புதல்வர்களான ஈழதர்சன் மற்றும் யாழீசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது..

சாவகச்சேரி, டச்சு வீதி மருதடியைச் சேர்ந்தவரும், ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான “கல்விக் கொடை வள்ளல்” அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் முதலாமாண்டு நினைவாக, சுவிஸ் நாட்டில் சோலோத்தூண் பகுதியில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் தோழர் லெனின் எனும் சிவகுரு செல்வபாலன் அவர்களின் புதல்வர்களான S. ஈழதர்சன், S. யாழீசன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பின் மூலமே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

முன்னதாக அன்னாரின் நினைவாக செல்வாநகரில் இயங்கிவரும் மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக் கூடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிவபுரம் மற்றும் கோயில்புதுக்குளம் கிராமத்து மக்களுக்கு அன்னாரின் நினைவு நாளில் விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஆதரவின்றி வாழும் முதியோர்களுக்கும் வறிய நிலையில் தொழில் வாய்ப்பின்றி வாழும் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குமென உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் ஆறுமுகம் விஜயபாலன் ஐயா அவர்களது முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” பல்வேறு சமூகப் பணிகள் ஊடாக நினைவு கூறப்பட்டு அன்னாரின் உறவினர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் பல்வேறு காலத்திற்கேற்ற உதவிகள் வழங்கியும் நினைவு கூறப்பட்டது.

தாயக சொந்தங்களுக்கு இவ்வாறான உதவிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. தாயக சொந்தங்களே உறவுகளே தோழர்களே தொடர்ந்து உங்களுடைய உதவிகள் உயிர் காக்கும் நற்கொடைகளாக தொடர்ந்து உதவி செய்திட மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வேண்டிக் கொள்கிறது.

அமரர் விஜயபாலன் அவர்களின் ஆத்ம இறையடியில் ஈடேற்றம் காண எல்லாம்வல்ல இறைவனை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வேண்டி வணங்குகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
23.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.