;
Athirady Tamil News

இறைபணிச் செம்மல் அமரர் நடனசிவராசா அவர்களின் திவசநாளில் நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)

0

இறைபணிச் செம்மல் அமரர் நடனசிவராசா அவர்களின் திவசநாளில் நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)

இறைபணிச் செம்மல் அமரர் நடனசிவராசா அவர்களின் திவசநாளில், அன்னாரின் மகளின் நிதி பங்களிப்பில் விசேட மதிய உணவும், வாழ்வாதார உதவிகளும் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###################################

காலஞ்சென்ற “இறைபணிச் செம்மல்” சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் நான்காமாண்டு நினைவு தினமும், சிரார்த்த திவச நாளையும் முன்னிட்டு விசேட மதிய உணவு வவுனியாவில் மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் ஒழுங்கு செய்யப்பட்டு கிராம மக்களுக்கு விசேட மதிஉய உணவு வழங்கி அனுஸ்டிக்கப்பட்டது.

மேற்படி “இறைபணிச் செம்மல்” அமரர்.சின்னத்துரை நடனசிவராசா அவர்கள், யாழ்.நீர்வேலியில் உள்ள ஆலயங்களில் பல திருப்பணிகளை செய்தவரும், நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம ஆலய தேர்த்திருவிழா உபயகாரரும், மேற்படி ஆலயத்துக்கென புதிய சித்திரத் தேர் திருப்பணியைச் செய்வித்து அன்பளிப்பு செய்தவரும், சப்த கன்னிகள் ஆலய முன்னைய நாள் நிர்வாகத் தலைவரும், அவ் ஆலயத்திற்கென ஓர் அன்னதான மடமும் கட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்தும், மக்கள் மனதில் வாழ்வதுக்கு எடுத்துக் காட்டாக அவரது பிள்ளையும் அவரது திருப்பணி நற்காரியத்தில் ஈடுபடுவது மிகவும் எடுத்துக் காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிசில் வாழும் அமரர் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் மகளான திருமதி தயாளினி குணரட்ணம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராம மக்களுக்கான விசேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இறுதி யுத்தத்தில் தனது கணவரையும் மூத்த மகளையும் ஒரே நாளில் செல் வீச்சுக்கு பலி கொடுத்து தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வீதிகளில் ஊதுபத்தி விற்பனை செய்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் தாயொருவருக்கு வாழ்வாதார உதவியாக “கோழிகளுடன் கோழிக்கூட்டினையும்” வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க அன்னாரின் இன்றைய திவசநாளில் விசேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன், நாட்டின் பயணத்தடை காரணமாக வாழ்வாதார உதவி எதிர்வரும் தினங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய திவசநாள் நிகழ்வுகள் குறித்த கிராம மக்களின் பங்குபற்றலோடு அன்னாரின் நினைவுத் திருவுருவப் படத்திற்க்கு தீபவிளக்கு ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டு, நினைவு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்த மக்களால் மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றவுடன் வருகை தந்த அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.. அத்துடன் கொரோனா தொற்று நோய் காரணமாக வீட்டில் தனிமைப்பட்டோருக்கு உணவு பொதி செய்யப்பட்டு இவ்வாறான வீடுகளின் முன் கதவுகளில் வைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு வருகை தந்த வயோதிபர் ஒருவர் நிகழ்வு நிறைவடைந்த நிலையில் விடைபெற்று செல்லும் போது, “இவ்வாறே தொடர்ந்து செய்யுங்கள், இன்றைய நாளில் கொடுக்கும் அளவை இறைவன் இரண்டாக்கி தருவான் இறைவன், எனவே உணவு கொடுக்கும் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுங்கள்” என்றார்.

முடிவாக நிகழ்வில் கலந்து கொண்ட அன்னை ஒருவரால் நன்றியுரை கூறப்பட்டு, அமரர் “இறைபணிச் செம்மல்” சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் திவசநாள் நிறைவு பெற்றது.

அமரர் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் ஆத்ம சாந்தி பெற மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம்வல்ல பரம்பொருளை பாதம் பணிந்து வணங்குவதோடு, அமரர் இறைபணிச் செம்மல் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் திவசநாள் நிறைவு பெற்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

30.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.