;
Athirady Tamil News

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. (படங்கள் வீடியோ)

0

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. (படங்கள் வீடியோ)
##################################

யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வதியும் “ராஜு” என அழைக்கப்படும் திரு.திருமதி.சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரி செல்வி. சதீனா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, (23.12.2022) செல்வி. சதீனா அவர்களின் நிதிப் பங்களிப்பில், வன்னி எல்லைக் கிராமமொன்றில் இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, உலருணவுகள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகையினருக்கு பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து இருந்த போதிலும், அவர்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவின் திடீர் இழப்புக் காரணமாக, அதனை செய்ய விரும்பாத போதிலும், தான் முதலே தெரிவித்தபடி மக்களுக்கான வாழ்வாதார உதவியை வழங்கி வைக்குமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இன்றையதினம் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் செல்வி சதீனா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செல்வி சதீனா அவர்கள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, உலருணவுகள் அடங்கிய பொதி வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது..

இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், சமூக சேவையாளருமான திரு பெருமாள் சஞ்சீவன் அவர்கள் ஒழுங்குபடுத்தி வழங்கி வைத்தார்.

செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் செல்வி சதீனா அவர்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வா. சதீனா சுபாஸ்கரன் அவர்கள், சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணப் பெருமானான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் மென்மேலும் பல சகல கலைகளையும் பெற்று நீடூழி வாழ்வதுடன், புலம்பெயர் வாழ் இளம்தலைமுறைகள் இதுபோன்ற நிதிப் பங்களிப்பு மூலம் செய்யும் உதவிகளை தாயக உறவுகள் வரவேற்பதுடன்,

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி. சதீனா அவர்களுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நிதிப் பங்களிப்பு வழங்கிய அவருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

23.12.2022

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.