களு கங்கை பாலத்தில் கோர விபத்தில் சிக்கிய கார் ; மயிரிழையில் தப்பிய உயிர்கள்
கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.
பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.