;
Athirady Tamil News

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, 40 கோடி ரூபா பெறுமதியான சொத்து விவகாரத்தில் சிக்கியுள்ளமை தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கொழும்பு டொரிங்டன் பகுதியில் போலி அடையாளத்தை பயன்படுத்தி இந்த சொகுசு வீடு கொள்வனவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த பணப்பரிமாற்றத்தின் பின்னணியில் முக்கியமான இருவர் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த இரகசிய தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே ‘சிறிலிய’ அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் போலி அடையாள அட்டை விவகாரங்களில் விசாரணைக்கு உள்ளான ஷிரந்திக்கு, இந்த புதிய 40 கோடி விவகாரம் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.