;
Athirady Tamil News

ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்

0

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாகரை – மாங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த பத்தினி வழிபாட்டு ஆலயத்திற்கு குறித்த இருவரும் சென்ற போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயை குணப்படுத்தும் செயற்பாடு
இந்நிலையில், ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுர ஜெயலத் என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக குறித்த ஆலயத்துக்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை
இந்நிலையில் பூசகரின் மனைவியுடன் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரான பூசகர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.