;
Athirady Tamil News

போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி…!!

0

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றார்.

இந்தியா, சீனா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20 ஆகும். இந்த அமைப்பின் 16-வது மாநாடு ரோமில் இன்று தொடங்கி நாளையுடன் முடிகிறது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி இன்று இத்தாலி பிரதமர் மரியோடிராகியை சந்தித்தார். இரு தரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் மோடி வாடிகன் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் உடன் சென்றனர்.

வாடிகன் நகரில் பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். ஜி-20 மாநாட்டுக்கு பிறகு பிரதமர் மோடி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு செல்கிறார். நவம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் அங்கு பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடக்கிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.

அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.