;
Athirady Tamil News

1998-க்கு இன்று முதல் நிவாரண பொதி !!

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நிவாரண பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தாக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி மற்றும் பொருட்கள் விநியோக கட்டணம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.