;
Athirady Tamil News

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.!!

0

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர்.

வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

அன்றைய தினம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் 1ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது , 21 மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.