;
Athirady Tamil News

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!! (படங்கள்)

0

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு பொருளை கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர் அங்குள்ள பொருட்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதன்போது ஊழியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் ஊழியர் வாடிக்கையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வாடிக்கையாரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விடயம் தொடர்பில் சதொச முகாமையாளாரிடம் எமது பிராந்திய செய்தியாளர் வினவியபோது, தாம் மேலிடத்து உத்திரவின்றி கருத்து கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.