;
Athirady Tamil News

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!!

0

வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது கள்ளக் கணவருடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சட்டப்பூர்வ கணவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) மதியம் அவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக அவரது கள்ளக் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.