;
Athirady Tamil News

தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க சி.சி.டி.விகளை அலசும் பொலிஸார் !!

0

பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கங்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுவரையில் சுமார் 100 சி.சி.டி.விகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்களின் வௌிச்சத்தால் குறித்த இரு வாகனங்களின் இலக்கங்களை அடையாளங்காணுவதில் பிரச்சினைகள் இருப்பதாகவும், வாகன இலக்கங்களைக் கண்டறிய சி.சி.டி.வி காட்சிகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வாகனங்கள் இரண்டும் கொஹூவளை நோக்கிப் பயணித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.