;
Athirady Tamil News

உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா…!!

0

உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது .

இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.

இந்நிலையில், உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியுள்ளோம் என ரஷ்ய ராணுவப் படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மிலிடோபோல் நகர் மேயர் கூறுகையில், தாக்குதல் வேண்டாம் என முடிவெடுத்து அமைதியாக சரணடைந்தோம் என தெரிவித்தார்.

ஏற்கனவே செர்னோபில் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.