;
Athirady Tamil News

தங்கத்தின் விலை 150,000 ரூபாயாக எகிறியது!!

0

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் ரூபாயினால் உயர்வடைந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு குறைவடைந்து தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று(14) 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரு லட்சத்து 29 ஆயிரம் 250 ரூபாயாக காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.