;
Athirady Tamil News

கீரிமலையில் நாளை இரத்ததான முகாம்!!

0

கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 19 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(17.04.2022) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் நடைபெறும்.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்பும் குருதிக் கொடையாளர்கள் 0773241755, 0761981178 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.