;
Athirady Tamil News

சீரமைப்பு பணியின்போது வீடு இடிந்து விழுந்தது- 2 பேர் உயிரிழப்பு

0

தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வரும், மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட்டை அகற்றி உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் கிரேன்களை வரவழைத்தனர்.

இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம், நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பணிகளை தான் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.