தமிழர் பகுதியில் இளைஞனின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்
வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.