;
Athirady Tamil News

ஆம்புலன்சில் கொண்டு செல்ல பண வசதி இல்லாததால் இறந்த சிறுவன் உடலை 90 கி.மீ பைக்கில் கொண்டுசென்ற தந்தை..!!

0

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகன் உடலை ஆஸ்பத்திரியிலிருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார்.

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து உறவினர் ஒருவரை பைக் எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.

திருப்பதியில் இருந்து பெத்வேல் கிராமம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அந்த தூரத்திற்கு மகனின் உடலை பைக்கில் கொண்டு சென்றார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.