மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி- ஜனாதிபதி இரங்கல்..!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/04/202204271051142526_Tamil_News_tamil-news-Ramnath-kovind-condolence-Thanjavur-Chariot_SECVPF.jpg)
தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப்பெரிய சோகம். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்சாரம் தாக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.