;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 3ம் உலக போரை தூண்டும் உக்ரைன் – ரஷிய மந்திரி குற்றச்சாட்டு..!!

0

28.4.2022

06.40: உக்ரைன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் ஆர்.ரவீந்திரா பேசுகையில்,
மாஸ்கோ மற்றும் கீவ் உள்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச் செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் வரைவு உள்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது என தெரிவித்தார்.

03.30: ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று ரஷியா சென்றார். அங்குவெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.

இந்நிலையில், ரஷியா பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர்ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரியை சந்திக்க உள்ளார்.

00.45: உக்ரைன் போர் தொடர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார்.

அதனால்தான் உக்ரைனுக்கு அவை உதவி வருகின்றன. இதன் வாயிலாக மூன்றாவது உலகப் போரை உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் திணிக்கின்றன. அணு ஆயுத மோதலை உருவாக்க இந்த நாடுகள் தூண்டுகின்றன. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.