;
Athirady Tamil News

‘சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் ஆரம்பகட்ட உடன்படிக்கை’ !!

0

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கான அடிப்படை உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர், அத்தியாவசியமென கருதப்படும் நடவடிக்கைகளை இலங்கை பூர்த்திசெய்ய வேண்டும்.

அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியுமெனவும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.