;
Athirady Tamil News

பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பின்னணிப் பாடகர்..!!

0

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). இவர் மலையாள இசையுலகில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழாவில் ப்ளூ டயமண்ட் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எடவா பஷீர் மேடையில் பாடல்களை பாடினார்.

எடவா பஷீர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், எடவா பஷீரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, எடவா பஷீர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாடகர் எவடா பஷீர் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.