;
Athirady Tamil News

ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

0

ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இன்றிலிருந்து கண்டியிலிருந்து கொழும்புக்கும் நாளை தொடக்கம் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையும் புதிய ரயில் சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் கொழும்பு கோட்டையிலிருந்து வஹ ரயில் நிலையத்துக்கிடையில் நாளை தொடக்கம் இரண்டு புதிய ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக முன்னதாக திட்டமிட்டபடி, கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸ வரையான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் இந்த ரயில் சேவைகள், 17ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.