;
Athirady Tamil News

கேரளாவில் வீட்டுக்குள் குண்டு வெடித்து தந்தை-மகன் பலி..!!

0

வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் பலர் கேரளாவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் இருந்து தொழிலாளிகள் பசல் ஹக், அவரது மகன் ஷகதுல் ஆகியோர் கண்ணூர் பகுதியில் தங்கி இருந்து குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கிடைக்கும் இரும்பு பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பிரித்து விற்பனை செய்வது வழக்கம். இதுபோல நேற்று சேகரித்த குப்பைகளை பசல் ஹக், ஷகதுல் இருவரும் வீட்டில் வைத்து பிரித்து கொண்டிருந்தனர். இரும்பு குண்டு ஒன்றை அவர்கள் உடைத்த போது அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பசல் ஹக், ஷகதுல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு பசல் ஹக் உடல் சிதறி இறந்து கிடந்தார். அவரது மகன் ஷகதுல் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷகதுல்லும் இறந்தார். இது பற்றி கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தந்தை-மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பசல் ஹக், ஷகதுல் சேகரித்து வந்த குப்பையில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த குண்டு எங்கிருந்து கிடைத்தது, எப்படி இவர்களிடம் வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.