;
Athirady Tamil News

13 ஆம் திகதி பதவி விலகல் மற்றுமொரு சதி? (வீடியோ)

0

மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் யாருக்கு அதிகாரம் கிடைத்தாலும் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி, சபாநாயகர் ஊடாக 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை மற்றுமொரு சதியோ தெரியவில்லை எனவும் காரணம் இவர்களுடைய அரசியல் வரலாறு அப்படிப்பட்டது எனவும் குமார் குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.