;
Athirady Tamil News

சிலிண்டர் விலையை உயர்த்துகிறது லிட்ரோ !!

0

எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் விலையை எதிர்வரும் காலத்தில் 50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டு மக்களின் தற்போதைய அவல நிலையைக் கருத்தில் கொண்டு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தொகுதியை ஏற்றிய கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தை இன்று (10) வந்தடைந்தது.

அதற்கமைய நாளை (11) முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (11) இலங்கையை வந்தடையும் என, லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையை வந்தடைந்த கப்பல்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.