;
Athirady Tamil News

ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்- போலீசார் அதிர்ச்சி..!!

0

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து 4 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 27 பேர் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த அனுப்பிய போலீசார், உடனடியாக அந்த ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.