;
Athirady Tamil News

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து..!!

0

இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கா்நாடக மாநிலம் கர்வாா் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் இன்று கப்பலில் கடற்படை வீரர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த கப்பலில் இருந்த வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.