;
Athirady Tamil News

முகமாலையில் வெடி விபத்து – ஒருவர் படுகாயம்!!

0

வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் , வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் , படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமாலை பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெடி பொருட்களை அகற்றும் பணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகின்றது. அதில் பணி புரியும் நபர் ஒருவர் வெடி பொருள் ஒன்றினை அகற்ற முற்பட்ட போது , அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.